கடற்பகுதி வரலாறு புராதனவரலாறு மங்கலான வரலாற்றுக்காலம்

இந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்

 

மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “The Periplus of the ErethraeanSea” என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது.

எங்கிருந்து புறப்பட்டனர்? இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால் நைல்நதி வழி சிறிது தூரம் சென்று, ஒரு கால்வாய் வழியே சென்று கெய்ரோ வந்தடைவர். இது தற்போதைய சூயஸ் கால்வாய்க்கு அருகே. இன்றைய சூயஸ் கால்வாய் முதல் பதிப்பல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் ஒருகால்வாய் இருந்தது. ஆனால் மிகவும் மணற்பாங்கான இடமாக இருந்ததால், சுத்தமாக வைத்திருக்க மிகவும் பாடுபடவேண்டியிருந்தது. பலமுறை முயற்சி செய்து நடவவடிக்கைகள் எடிக்ககப்பட்டன.

மற்றொரு வழியில் ஒரு நீர்வீழ்ச்சி வரை சென்று ‘பெர்ணிகா’ என்ற இடம்வழியாக நைல்நதியிலிருந்து ஒட்டகம் மூலம் பயணம் செய்து கடற்கரையை அடையலாம். வேறொரு வழியில் லெபனானிலிருந்து தற்போதைய இஸ்ரேல் வழியாக பாலைவனம் வழியாக ‘பெட்ரா’வை அடைவர். பெட்ரா செழிப்படைந்ததற்கான காரணம் இந்தவித பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம் அதிகமாக இருந்ததே. அங்கிருந்து ‘அக்காபா’ செல்வர். எந்தவழி வந்தாலும் கடைசியில் ‘செங்கடல்’வந்து சேரவேண்டும் மிகவும் குறுகிய கடலாதலால் அதன் இருபுறமும் வாணிபம் செய்தல் எளிதாயிற்று. உண்மையில் ‘எரித்ரேனியன்’என்ற கிரேக்க சொல்லிற்கு சிவப்பு என்று பொருள். செங்கடல் என்பதே அது.

செங்கடலுக்குப்பின் அவர்கள் ஏமன் வருவர். அங்கிருந்து ஒரு சிறிய தாவலில் ‘ஸொகாட்ரா’ என்ற தீவிற்கு., ஏன் அந்த தீவுக்கு அப்பெயர்? துவக்கத்தில் த்வீபா சுக்தாரா என்று அழைக்கப்பட்டது. இந்தியர்களும் அராபியர்களும் ஏராளமான வாணிபத்தில் ஈடுபட்ட இடம். இன்றும் அங்கே இந்திய மாலுமிகள் விட்டுச்சென்ற பல்வேறு வரைதல்கள் அங்குள்ள குகைகளில் காணப்படுகின்றன.அங்கிருந்து இந்தியா செல்ல இருவழிகள் இருந்தன. பழையவழியில் வடக்கே சென்று ஏமன் அடைந்து பலுசிஸ்தான் கரைவழியாக வந்து குஜராத் வந்தடைவர். மேலும் தெற்கே செல்வர்.

சுமார் கிபி முதலாம் நூற்றாண்டில் ஒரு புத்திசாலி ‘ஹிபப்பாலஸ்’என்பவன் இந்த சுற்றுப்பாதையைத் தவிர்த்து, பருவக்காற்றின் உதவியோடு கடல்பயணம் மேற்கொண்டு நேராக கேரளக்கரையை அடையலாம் என கண்டுபிடித்தான். அதன் விளைவாக சீக்கிரமே கேரளத்தில் ஒரு பெரிய துறைமுகம்’முச்சிரி’என்ற இடத்தில் தற்போதைய கொச்சிக்கு சற்றுவடக்கே தோன்றியது. அதனருகே பட்டணம் என்ற கிராமத்தில் ஏராளமான தொல்பொருள் ஆய்வு கண்டுபிடிப்புகள் அக்காலத்தியவை கிடைத்தன. இந்த வழிகளே வாணிபத்திற்காக ஏற்பட்டவையாகும். இது ரோமாபுரிப் பேரரசுக்கும் முன்பாக,அது ஜனநாயகமாக இருந்த காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டன. இது யூதர்களின் பெரிய கோயில் தகர்க்கப்பட்டதற்கும் முன்னமே. அதனால் ஏராளமான யூதர்களும் இந்த கடற்கரைவழி பூராவும் குடியேறினர்.

அடுத்த கேள்வி என்னென்ன பொருட்கள் பண்டமாற்றுசெய்யப்பட்டன? ‘பெரிப்ளஸ்’கையேட்டின்படி இந்தியர்களின் ஏற்றுமதியில் பருத்தி ஒரு முக்கியமானபங்கு வகித்தது. ஏனெனில் அதிக விலைமதிப்புள்ளதாக இருந்தது. குஜராத்திலிருந்து பருத்தியைத்தவிர இரும்பு எஃகுப்பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இரும்பு இந்தியக்கண்டுபிடிப்பு மட்டுமல்லாமல் தரம் வாய்ந்ததாகவும் கருதப்பட்டது. பல்வேறு இரும்புத்தாதுவகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. கேரளம் முச்சிரி துறைமுகத்திலிருந்து பல நறு மணப் பொருட்கள், முக்கியமாக கருப்பு மிளகு ஏற்றுமதியில் முக்கியபங்கு வகித்தது. இதைத்தவிர தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தோனேஷியர்கள் நறுமணப்பொருட்களை முச்சிரிவரை எடுத்துவந்து இந்தியர்கள் மூலம் ரோமானியர்களுக்கு விற்பனைசெய்தனர். இவ்வாறு ஏற்றுமதி வாணிபம் நடைபெற்றது.

அடுத்தபடி இந்தியர்கள் என்ன இறக்குமதி செய்தார்கள் என பார்ப்போம். இத்தாலிய ஒய்ன்கள்,மதுபானங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதைத்தவிர இறக்குமதியில் ஒருபங்கு அரசர்களின் அந்தப்புரங்களுக்காக அழகிய பெண்கள் இருந்தனர். இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கிய விஷயம் என்னவென்றால்,புராதன கப்பலோட்டம் சார்ந்த வரலாற்றின்படி மூன்றாம்நிலை தேசங்களும் வெளிநாட்டு மதுபானங்கள், வெளிநாட்டு வழித்துணைவர்கள் ஆகியவை கலந்த வாணிபம் செய்துவந்தனர்.

இவ்வளவு வணிகப் பண்டமாற்றங்களினால் பல சிக்கல்கள் ஏற்பட்டன.இந்தியர்கள் வெளிநாட்டு மதுபானங்களும்,பெண்களும் இறக்குமதி செய்தும் முடிவில் வியாபாரம் உபரியாகவே இருந்தது. இதற்குப்பதில் தங்கம் கிடைத்துவந்தது. தங்கம் ஏராளமாக வெளியேறிவிட்டதால் லட்சக்கணக்கில் தங்க நாணயங்கள் கொணர்ந்து குவித்த ரோமானியர்களுக்கு காசோலை அச்சிடுதல் பாதிக்கப்பட்டது. ரோமாபுரியில் சுமார் கிபி 2ஆம்நூற்றாண்டில் பெரிய பொருளாதார நெருக்கடி உருவானது. மந்திராலோசனை சபையில்’ப்ளிமி’ போன்ற வல்லுனர்கள் இந்திய வணிகர்கள்மீது கடின நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர். பேரரசர் ‘வெஸ்வேஸியன்’ இந்திய வாணிபத்தின்மீது ஒருதடை விதிக்கத் தீர்மானித்தான். பிச்சினை இந்தியர்களையும் யூதர்களையும் சார்ந்தது. அவன் புதிய பல கடத்தல் வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து தோல்வியுற்றான்.

எனவே மீண்டும் வாணிபம் தொடங்கிற்று. இந்தியர்களுக்கு ரோமானியர்கள் தரும் தங்கக்காசுகளில் தங்கத்தின் சேற்கையைக் குறைக்கத் தொடங்கினர். காசோலையின் மதிப்பு தாழ்த்தப்பட்டது. ஆனால் இந்தியர்கள் இந்தக்காசுகளை ஏற்றுக்கொண்டனர். தொல்பொருள் ஆய்வுக்கூடங்களில் இந்திய கடற்கரைஓரம் உள்ள இடங்களில் ஏராளமான நாணயங்கள் கிடைக்கப்பெறும். அவற்றின் காலத்திற்குத்தக்கவாறு தங்கத்தின் சேர்க்கை குறைந்துகொண்டே வந்தது தெளிவாகிறது.

Leave a Reply

You may also like

உங்களுக்குத் தெரியுமா கடற்பகுதி வரலாறு சுவிசேஷ அச்சுறுத்தல் புராதனவரலாறு பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம் வரலாறு

ஏறக்குறைய அனைத்து ஆபிரிக்க நாடுகளின் எல்லைகளும் ஆப்பிரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது பங்கேற்பு இல்லாமல் ஐரோப்பியர்களால் தீர்மானிக்கப்பட்டது

post-image

Translation credits: Priya Darshini C N

ஆப்பிரிக்காவையும் மத்திய கிழக்கையும் கொஞ்சம் பார்ப்போம். கி.பி 1500 இல் ஆப்பிரிக்காவைப் பார்த்தால், சில சாம்ராஜ்யங்கள் இருந்தன, ஆனால்  மிகக் குறைவான அரசியல் எல்லைகள் மட்டுமே தற்போதைய எல்லைகளுடன் பொருந்துகின்றன. ஒரு சிறிய கானா அல்லது ஒன்று அல்லது இரண்டு நாடுகள் மட்டுமே பொருந்துகின்றன. ஆப்பிரிக்காவின் மீதமுள்ள வரைபடம் மாறிவிட்டது. அது எவ்வாறு பெர்லின் மாநாட்டைப் பற்றி உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? 1, 2 சரி. எனவே, ஆப்பிரிக்காவின் துருவல் நடந்து கொண்டிருந்தது. ஆப்பிரிக்காவிற்கு துருவல் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகள் காலனித்துவமயமாக்கலில் ஈடுபட்டன, எனவே அவர்கள் ஆப்பிரிக்காவைத் துரத்த முடிவு செய்தனர். எத்தியோப்பியா மற்றும் லைபீரியாவைத் தவிர, அனைத்து ஆபிரிக்க நாடுகளின் எல்லையும் ஐரோப்பாவில் 1885 முதல் 1899 வரை ஐரோப்பாவில் தீர்மானிக்கப்பட்டது. முழு ஆப்பிரிக்க வரைபடமும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையில் துண்டாக்கப்பட்டன. 13 ஐரோப்பிய நாடுகள்; அமெரிக்காவும் ஒட்டோமான் பேரரசும் ஒன்றுகூடி, சுவரில் ஒரு வரைபடத்தை வைத்து, இந்த படம் , இதில்  நீங்கள் இதை எடுக்க முடிவு செய்தீர்கள், இதை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்தன.

பல முறை ஆட்சியாளரைப்…

Read More
கடற்பகுதி வரலாறு புராதனவரலாறு பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம் வரலாறு

கடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல்

post-image

Translation credits: Priya Darshini C N

மீண்டும் இந்தியாவில் மிக உயர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரைக் கொண்டிருந்தோம். அவர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ். அவர் ஒரு நில தொல்பொருள் ஆய்வாளர் மட்டுமல்ல, அவர் இந்தியாவில் கடல் தொல்பொருளை அறிமுகப்படுத்தியதில் முன்னோடி ஆவார். நமது புராணங்களின் நிலை என்ன, அது எவ்வளவு தூரம் சரியானது என அவர் அறிய விரும்பினார்.

பேராசிரியர் பிபி லால் இங்கே வேலையைச் செய்து கொண்டிருந்தார், அப்பொழுது இவர் நமது புராண துவாரகையின் நிலை என்ன என்பதை கண்டறிய விரும்பினார். பேராசிரியர் சங்கல்யா போன்ற பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நிலப்பரப்பில் அகழ்வாராய்ச்சி செய்தனர், அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தின் பழமை கிமு 1 ஆம் நூற்றாண்டு வரை மட்டுமே சென்றது. இது ஒரு பிரச்சினையாக இருந்தது, ஏனெனில் பேராசிரியர் லால் அதை கிமு 1000 க்கு தேதியிட்டார், அது கிட்டத்தட்ட சமகாலமானது, ஆனால் பேராசிரியர் சங்கல்யாவின் தேதியிட்டிருந்ததோ  கிமு 100 மட்டுமே. எனவே  கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளி இருந்தது, பின்னர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ் , “இல்லை, நாம் நேரடியாக கடலில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்” என்று கூறினார். அந்த நேரத்தில் …

Read More
கடற்பகுதி வரலாறு புராதனவரலாறு பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம் வரலாறு

தற்போதைய கிரேக்க நாடு ஏன் பண்டைய கிரேக்கத்தின் நாகரிக தொடர்ச்சி இல்லை?

post-image

Translation credits: Priya Darshini C N

கி.பி 1900 இல் கிரேக்க நாடு இறுதியாக வெளிப்பட்டது. பண்டைய நாகரிகங்களை நாம் நினைவு கூர்ந்தால், கிரேக்கம், எகிப்து தான் நினைவுக்கு வருகிறது, ஆனால் கிரேக்கத்தின் நிலையை நீங்கள் கண்டால், அது முதலில் ரோமானியர்களால் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக கிரீஸ் கிறிஸ்தவமயமாக்கப்பட்டு அதன் மரபுகளை இழந்தது. அனைத்து கிரேக்க கடவுள்கள், ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு பணம் செலுத்துவதால் தடைசெய்யப்பட்டது, அந்த விளையாட்டுகளில் அவர்கள் நிறைய சலுகைகளை வழங்கினர், இதன் காரணமாக கிறிஸ்தவ பேரரசர் தடை செய்ய உத்தரவிட்டார். கோயில்கள் அழிக்கப்பட்டன, மரபுகளை இழந்தன,  இறுதியாக, கிரேக்கம் கிறிஸ்தவமயமாக்கப்பட்டது.

எனவே நாகரிக தொடர்ச்சியாக கிரேக்கம் என்று சொல்ல முடியாது. கிரேக்கம் ஏன் மீண்டும் தோன்றியது? ஏனென்றால் ஐரோப்பா 1800 களில் கிரேக்க உரையை மீண்டும் கண்டெடுத்து, இதனால் அவர்கள் கிரேக்க உரையை அரபு மூலம் பெற முடியும். எனவே, அவர்கள் கிரேக்க நாகரிகத்தை மீண்டும் ஸ்தாபிக்க முடிவு செய்தனர், இதனால் அவர்கள் கிரேக்க நாகரிகத்தை அழித்திருந்தாலும், தங்கள் கிரேக்க தோற்றத்தை அவர்கள் உரிமை கோர முடியும். சி கே ராஜுவின் ஒரு சுவாரஸ்யமான…

Read More
இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் இஸ்லாமிய ஆக்ரமிப்பு பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம் வரலாறு

தன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்

post-image

Translation Credits: Geetha Muralidharan.

குருதேவர் சொல்ல தொடங்கினார்,”முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்”. ”எதற்காக குருதேவா” ”ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான் ஆளும் இந்திய நாடு ஏன் மாறக்கூடாது என்று நினைத்தான். அவன், ஹிந்துக்கள் தங்கள் மதத்தை விட்டு மாற, அவர்கள்  மீது ஜெசியா என்ற வரியையும், மற்றும் பல அவமானகரமான நிபந்தனைகளையும் விதித்தான்.

தன் அதிகாரிகளிடம் அவர்கள் தினமும் ஒரு குன்று அளவு பூணூலை கொண்டுவந்து அதன் எடைக்கு சமமான இந்துக்களை மதம் மாற்றியோ அல்லது கொன்றோ காட்ட வேண்டும் என்று ஆணை இட்டான்.பல பேர்கள் கொல்லப்பட்டனர், பல பேர்கள் பயத்தினால் மதம் மாறினார்கள்”. ”அவன் வெற்றி பெற்றானா?” ஆதித்தியா கேட்டான்.”இல்லை, இந்தியாமுழுவதும் பல ஆலயங்கள் இருந்ததால் அவன் கொடூரம்  அவர்களை மிகவும் பயமுறுத்தியது. எங்கு அவன் படைகள் போனாலும் அங்கு…

Read More
உங்களுக்குத் தெரியுமா புராதனவரலாறு பேச்சு துணுக்குகள்

இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?

post-image

இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது? சிந்து-விலிருந்து ஹிந்து-வாக மாறியது. ஸ்பானிஷ் மொழியில் ஹ எழுத்தை போல, இதில் ஹ மறைந்து இண்டஸ் என மருவியது. நான் பார்சிலோனாவில் இருந்தபொழுது ஒரு உணவகத்தின் பெயர் “லோ காமிட ஹிந்து” என இருந்தது. ஆனால் அவர்கள் “இந்து” என உச்சரித்தார்கள். இவ்வகையான குறிப்புகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்து கூட பெறலாம். பல நாடுகளில் இண்டி, இண்டிகா, இந்தியா போன்ற பெயர்களில் அழைப்பார்கள்.

Translation credits: Priya Darshini C N

Read More
இந்து கோயில்களை அவமதித்தல் இஸ்லாமிய ஆக்ரமிப்பு உங்களுக்குத் தெரியுமா பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம்

ஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை? – ஶீஜனஂ உரையாடலஂ

post-image

இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே? இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த இடத்தின் மூலைமுடுக்கெல்லாம் அத்துப்படி.

எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் ஒரு மேல்நாட்டு வெள்ளைக்கார தம்பதியினர் அவர்களின் வழிகாட்டியிடம் விவாதித்துக் கொண்டிருந்தனர். வழிகாட்டி அவர்களிடம்,  “இதுதான் இங்கே இருக்கும் கோவில்களிலேயே பெரியதும் அழகானதும் ஆகும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனே அவர்கள் தங்கள் கையிலிருந்த புத்தகத்தைப் படித்துவிட்டு,  “இது புதிய கோவிலாகும் . 1939இல் கட்டப்பட்டது” என்று பதிலளித்தனர். வழிகாட்டியிடம் தங்களை தென்னிந்தியாவில் உள்ளது போல பழமையான அழகான கோவில்களுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரினர். வழிகாட்டி, “அந்த மாதிரி கோவில் இங்கு ஒன்றும் இல்லை; வேண்டுமானால் யோக மாயா என்னும் சிறிய கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார். அவர்களும் விடாமல், “டெல்லி இந்துக்கள் நகரம். இங்கே நாங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையான  மசூதிகளை பார்த்தோம்;  ஆனால் அது மாதிரி பழமையான கோவில்கள் இல்லையே” என்றனர். அதற்கு வழிகாட்டி, “ஆமாம் பல நூற்றாண்டுகளாக நாங்கள் பெரிய கோவில் ஒன்று கூட…

Read More
இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் இஸ்லாமிய ஆக்ரமிப்பு காஷ்மீரம் பேச்சு துணுக்குகள் மங்கலான வரலாற்றுக்காலம்

காஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி

post-image

நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  அப்போதுதான்  இந்தப் பிரச்சினையின்  விதையை  எப்படி  கண்டு கொண்டேன் என்று  புரியும்.

இது  என்ன தெரியுமா ? இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.    முகாம்களுக்கு சென்று  அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க  முயற்சி செய்து கொண்டிருந்தோம்.   அங்கு பல முகாம்கள் இருந்ததால்  வேலைப்பளுவை  பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும் அறிகுறிகளை  எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.   பெரும்பான்மையானவர்களுக்கு  தூக்கமே வருவதில்லை.   பலருக்கு  கொடும் கனவுகள் வந்தன.  இதைப்பற்றி அவர்களுடன் பேசியும்  ஆறுதல் கூறியும் வந்தோம்.  என்னென்ன பயிற்சிகள் இத்தகைய அறிகுறிகளை குறைக்க உதவும்  என்பதையும் சொல்லிக்கொடுத்தோம்.

ஒரு நாள் முகாமிற்கு வெளியே   காஷ்மீரி உடை அணிந்த  ஒரு வயதானவரை  பார்த்தோம். பார்ப்பதற்கு கண்ணியமாக  தெரிந்தார். அவர் எங்களை அணுகி  “நீங்கள் ஏன் இங்கு  வருகிறீர்கள்?”  என்று வினவினார்.   நான்  சொன்னேன் “நாங்கள் இங்கு வருவது   இங்குள்ள  காஷ்மீரிகளின் மன உளைச்சலுக்கு முடிந்த உதவியை செய்வதற்குத்தான்” என்று . அவர் சிரித்தார்.  பின்  என்னை  கூர்ந்து நோக்கி ” உங்களுக்கு  நாங்கள் படும் மனத் துயரம் என்ன என்று புரியுமா?”  என்று கேட்டார்.  நான் எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன் “ இவர் என்ன சொல்ல வருகிறார்?  இவர் இந்த உரையாடலை எத்திசையில் கொண்டு செல்ல  நினைக்கிறாரோ  அது எனக்கு ஏற்புடையதாக இல்லை “. அதனால் அவரிடம்…

Read More
இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் உங்களுக்குத் தெரியுமா சிந்துசரஸ்வதி நாகரிகம் புராதனவரலாறு பேச்சு துணுக்குகள்

வேதகாலத்தில் ஜனபதாக்களின் புவியியல்

post-image

 

ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார்.

வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம் இருந்துள்ளது. குரூ, கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்துள்ளது. இதற்கு கிழக்கே கங்கையின் மறுகரையில் பாஞ்சாலம் அமைந்திருந்தது. மற்றும் வடக்கே சிரிஞ்சயமும் தெற்க்கே மத்ஸ்யமும் அமைந்துள்ளது.  காந்தாரம், கைகேயம், மத்ரதேசம் வட ஜனபதாக்கள் மற்றும்  கோசலை, விதேகம், காசி கிழக்கு ஜனபதாக்கள் ஆகும்.

வெவ்வேறு பிராந்தியங்களுக்குச் செல்வதற்கான சில நெறிமுறைகளை விவரிக்கும் போது சிந்து, சௌவிர, சௌராஷ்டிர, அநார்த்த, அவந்தி, விதர்ப, மகத மற்றும் அங்க தேசங்களை கிருஷ்ண யஜுர்வேதத்தின் பௌதாயன சூத்திரம் குறிப்பிடுகிறது. இப்பகுதிகளை ‘சங்கீர்ணயோனையா’ அதாவது எல்லை ஜனபதாக்கள் என  பௌதாயனதர்ம சூத்திரம் கூறுகிறது.

வேதங்கள் ஆர்யவர்த்ததை தாண்டி இருக்கும் ஜனபதாக்களையும் விவரிக்கின்றன. தொலைதூரப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதற்கான நெறிமுறைகளை விவரிக்கும் போது, ​​ஆராட்ட, காரஷ்கர, புண்டரம், சௌவீரம், பங்கா மற்றும் கலிங்கத்தையும் பௌதாயனதர்ம சூத்திரம் கூறுகிறது. இவற்றில் ஆரட்டம் பற்றி பொதுவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆரட்டம் என்பது என்ன, எங்கேஇருக்கிறது?…

Read More
%d bloggers like this: